திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 4.65 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் வழங்கினார். இதில் ஆரணி வட்டாட்சியர் மு.தியாகராஜன், மல்லவாடி அரசு மறுவாழ்வு மையத்தின் மருத்துவர் மணிகண்டன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ஜோதிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.