tamilnadu

மன்சுராபாத் – சேத்துப்பட்டு இடையே பேருந்து இயக்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை, அக். 2- திருவண்ணாமலை மாவட்டம் மன்சுராபாத் – சேத்துபட்டு இடையே அரசு பேருந்து இயக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்வு  கூட்டம் நடைபெற்றது. சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரம் தலைமை தாங்கினார். வட்  டாட்சியர் சுதாகர், துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் விவசாயி ராஜேந்திரன் பேசுகையில், எங்கள் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், தேவிகாபுரம் வந்து, சேத்துப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே சேத்துப்பட்டில் இருந்து மன்சுராபாத்திற்கு, அரசு நகர பேருந்து இயக்க வேண்டும். ஏற்க னவே இந்த தடத்தில் அமைச்சரால் இயக்கப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். விவசாயி சுப்பிரமணி பேசுகை யில், பெரிய கொழப்பலூர், கங்கா புரம் சாலைகளை சீரமைக்க வேண்டும், சித்தேரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயை தூர்வார வேண்டும், அடைப்புகளை அகற்ற வேண்டும் என்றார். உதவி இயக்குனர் சுந்தரம் பேசுகையில், தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கான விதை கள் வந்துள்ளன. தேவைப்படும் விவசாயிகள் போதிய ஆதாரங்களை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். பெரிய கொழப்பலூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில், அந்த பகுதி விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் இடுபொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வட்டாட்சியர் சுதாகர் பேசுகை யில், விவசாயிகள் தங்கள் கோரிக்கை களை மனுவாக கொடுத்தால், அதனை சம்பந்தப்பட்ட துறை அதி காரிகளுக்கு அனுப்பி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.