திருவண்ணாமலை, ஜூலை 22- கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி செங்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே, அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி யில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு, பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட ஐம்பதுக்கும் மேற் பட்டவர்களுக்கு, முறையாக உணவு வழங்கப்படவில்லை என்றும், குடிநீர், கழி வறை வசதிகள் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், இதனால், உடல்நிலை பாதிப்படைவதாகவும் கூறினர். கொரோனா பரிசோனை செய்து ஐந்து நாட்கள் கடந்தும் இதுவரை பரிசோதனை முடிவுகள் வழங்கவில்லை எனக்கூறி, தனி மைப்படுத்தப்பட்ட அறையை விட்டு வெளியேறி அதிகாரிகளிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் தேவையான அடிப் படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தனர்.