tamilnadu

வனத் துறையினர் மீது துப்பாக்கிச்சூடு:2 பேர் கைது

திருவண்ணாமலை, மார்ச் 1- திருவண்ணாமலை வனப்பகுதியில் சிலர் வன விலங்குகளை வேட்டை யாடுவதாக மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து, அவரது உத்தரவின் பேரில் வனத்துறையினர் திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் உள்ள புனல்காடு பகுதியில் வெள்ளியன்று இரவு சோதனை செய்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் புனல்காடு வேடியப்பன் கோயில் அருகேயுள்ள வனப்பகுதி யில் இருந்து 2 பேர் இருசக்கர வாகனத்தில் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றுள்ளனர்.  இவர்களை வனத்துறையினர் துரத்திச் சென்றனர். இதனை அறிந்த வாலி பர்கள் வனத்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் வனக்காப்பாளர் சம்பத்து க்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனக்காப்பாளர் பாலாஜி நிலைதடுமாறி  கீழே விழுந் தார். இதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.  அதேபோல, நாட்டுத் துப்பாக்கி சுட்டு சென்ற வர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.  இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கி ருந்த வனத்துறையினர் 4 பேரையும் மீட்டு திரு வண்ணாமலை அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைகக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திரு வண்ணாமலை தாலுக்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வனப் பகுதியில் வேட்டையாடச் சென்றவர்கள் கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (29), சிவசந்தி ரன் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.