திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக பல நாட்கள் குடிநீர் வழங்க முடியாத நிலை ஊராட்சிகளில் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி செயலாளர்கள் மீது நடவ டிக்கை மேற்கொள்வதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.