திருவண்ணாமலை, டிச.1- திருவண்ணாமலை மாவட்டம் போளூர்வட்டம் கரைப்பூண்டி தரணி சர்க்கரை ஆலை ஊழியர்க ளுக்கு அக்டோபர் மாத ஊதியத்தை இதுவரை வழங்காததை கண்டித்து கண்டண ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சர்க்கரை ஆலை எம்ப்ளாயிஸ் யூனி யன் தலைவர் பி.கே.கண்ணன் தலைமை தாங்கி னார். துணைத் தலைவர் கே.பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.பாரி வழக்கறிஞர் ரஜினிகாந்த், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப.செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு சர்க்கரை தொழிலார் சம்மேளனம் பொதுச் செயலாளர் வி.உதய குமார் நிறைவுரையாற்றி னார். அக்டோபர் மாதத்திற்கான ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கான பணத்தை, உரிய காலத்தில் வழங்கி கரும்பு நடவு அதி கரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பத்து ஆண்டுகள் பணி நிறைவு செய்த அனைத்து பருவகால தொழிலாளர்களையும், ரெகுலர் தொழிலாளியாக பணிநிரந்தரம் செய்திட வேண்டும், தொழிற்சங்க விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட்டு, தொழிற்சங்க த்தை அங்கீகாரம் செய்து கூட்டு பேர உரிமையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அம்ச ங்களை வலியுறுத்தி நிர்வாகிகள் உரையாற்றினர்.