திருவண்ணாமலை, ஆக. 6- திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் கொள் முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகத்தைக் கண்டித்தும், உற்பத்தி யாகும் பால் அனைத்தையும் கொள்முதல் செய்யக் கோரி யும் பால் உற்பத்தியாளர்கள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு வியா ழனன்று (ஆக. 6) ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் தேங்கும் பாலை குழந்தை களுக்கும், முதியோர்க ளுக்கும் இலவசமாக வழங்க வேண்டும், பால் விலையைக் குறைத்து கொள்முதல் செய்யும் தனி யார் நிறுவனங்களின் பகல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் டி.கே.வெங்க டேசன் உள்ளிட்டு பால் உற் பத்தியாளர்கள், விவசாயி கள் சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். கோரிக்கைகளை நிறை வேற்ற நிர்வாகம் நட வடிக்கை எடுக்கவில்லை யென்றால் வரும் 14ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு மாவட்ட தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.