tamilnadu

எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு

 

திருவண்ணாமலை, பிப். 2- திருவண்ணாமலையில் இந்தியன் ஆயில் சார்பில் எரிபொருள் சேமிப்போம், ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி சங்கம் மற்றும் இந்தியன் ஆயில் இணைந்து எரிபொருள் சேமிப்பு குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் வாருங்கள் நடப்போம் என்ற நடைபயண விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈசானிய மைதானத்தில் நடைபெற்றது.  பேரணியை ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, மாவட்ட ஊராட்சிகள் தலைவர் பார்வதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். அண்ணா நுழைவாயிலில் இருந்து புறப்பட்ட பேரணி பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது

;