tamilnadu

பூ மார்க்கெட் செயல்படாததால், சாலையில் நடக்கும் வியாபாரம்

திருவண்ணாமலை, ஜுன் 8- திருவண்ணாமலையில் செயல்படும் பூமார்க்கெட் புகழ்பெற்றது. இதன் மூலம் பூ விவசாயம் செய்யும் விவசாயி களும், பூ வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக திருவண்ணாமலை ஜோதி பூ மார்க்கெட்டை  திறக்க அனு மதிக்கப்படவில்லை. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள  ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு சமீபத்தில் தளர்வுகளை அறிவித்தது. ஆனால்  திருவண்ணாமலை ஜோதி பூ மார்க்கெட் செயல்பட அனுமதிக்கவில்லை. சாலையோரம் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் தினசரி காலையில் பூ வாங்க ஏராளமானோர் வருகின்றனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் நடப்பதால் கொரோனோ தோற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்ப தால் நீண்ட நேரம் சாலையில் வியாபாரம் செய்ய முடியாமல்  வியாபாரிகள் தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடந்தசில தினங்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில், ஜோதி பூ மார்க்கெட் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் மீண்டும் பூ மார்க்கெட் செயல்பட  அனுமதிக்க வேண்டும் அல்லது வேறு காலியாக உள்ள இடங்களை தேர்வு செய்து, அங்கு பூ வியாபாரம் செய்ய  அனுமதிக்க வேண்டும் என்று பூ வியாபாரிகளும், விவசாயி களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.