tamilnadu

மின்சாரம் தாக்கி  8 மாத கர்ப்பிணி பலி

திருவண்ணாமலை, ஆக. 24- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பரமனந்தல் திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்தவர் 8 மாத கர்ப்பிணி சுஜாதா.  இவர் திங்களன்று (ஆக.24)  தனது  விளை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டார் போட்டபோது திடீரென மின்சாரம் தாக்கியது.  சுஜாதா அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற முயன்ற அவரின் தந்தை முனுசாமியையும் மின்சாரம் தாக்கியது. இவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற தாய் பூங்கொடியையும் மின்சாரம் தாக்கியது. இவர்கள் அனைவரையும் மீட்டு, சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுஜாதா  உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இகுறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;