tamilnadu

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை, மார்ச்.12- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுக்கா, வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து களம்பூர் காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதேபோல், போளூர் தாலுக்கா, கீழுர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மனைவி மேனகா (35) என்பவர் தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இவரை போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி  பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி  இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணையிட்டார்.  கடந்த 2 மாதத்தில் மட்டும் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;