tamilnadu

திருவண்ணாமலையில்  11 புதிய பேருந்துகள் துவக்கம்

திருவண்ணாமலை,மார்ச்.6- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருவண்ணாமலை மண்டலம் சார்பாக கோவை, திருப்பூர் வழித்தடத்தில் 3 புதிய குளிர்சாதன பேருந்துகள் உட்பட 11 புதிய பேருந்துகளை  அமைச்சர்  சேவூர் எஸ். இராமச்சந்திரன்  துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் க. சு. கந்தசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருவண்ணாமலை மண்டல பொது மேலாளர்  கே. தசரதன், துணை மேலாளர் (வணிகம்) திரு. ஏ. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், திருவண்ணாமலை-கோவை (வழி) செங்கம், ஊத்தங்கரை, சேலம் வழித்தடத்தில் ஒரு பேருந்து (தடம் எண்.434, புறப்பாடு நேரம்: திருவண்ணாமலை-22.15, கோவை-11.15), திருவண்ணாமலை-திருப்பூர் (வழி) செங்கம், ஊத்தங்கரை, சேலம் வழித்தடத்தில் ஒரு பேருந்து (தடம் எண்.435, புறப்பாடு நேரம்: திருவண்ணாமலை-21.40, திருப்பூர்- 10.27). திருவண்ணாமலை-திருப்பூர் (வழி) தானிப்பாடி, அரூர், சேலம் வழித்தடத்தில் ஒரு பேருந்து (தடம் எண்.435சூ, புறப்பாடு நேரம்: திருவண்ணாமலை-12.50, திருப்பூர்-22.00), ஆகிய வழித்தடங்களில் 3 புதிய குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆரணி-திருப்பூர் (வழி) திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சேலம் வழித்தடத்தில் ஒரு பேருந்து (தடம் எண்.435 டீ, புறப்பாடு நேரம்: ஆரணி-19.45, திருப்பூர்-09.10), காஞ்சிபுரம்-சேலம் (வழி) வந்தவாசி, திருவண்ணாமலை, ஊத்தங்கரை, சேலம் வழித்தடத்தில் ஒரு பேருந்து (தடம் எண்.437), காஞ்சிபுரம்-சேலம் (வழி) செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, ஊத்தங்கரை வழித்தடத்தில் இரண்டு பேருந்துகள் (தடம் எண்.438), சென்னை-சேலம் (வழி) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் வழித்தடத்தில் நான்கு பேருந்துகள் (தடம் எண்.333, புறப்பாடு நேரம்: சென்னை-05.30, 07.00, சேலம்-15.22, 17.36), ஆகிய வழித்தடங்களில் 8 புதிய பேருந்துகள் இயக்கப்படுகிறது.