திருப்பூர், அக்.4- புதிய வேளாண் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூர் உழவர் சந்தை அருகில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உழவர் சந்தை அருகே அதிகாலை 6 மணியளவில் வாலிபர் சங்கத்தின் கிளை நிர்வாகி சுரேஷ் தலைமையில் புதிய வேளாண் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், மாவட்ட தலை வர் ஞானசேகர், மாவட்டச் செயலா ளர் மணிகண்டன், திருப்பூர் தெற்கு மாநகர துணை செயலாளர் நவீன் உட் பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஒழுங்கு முறை விற்பனை முறையினை தனி யார் பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கதே, விலை பொருள் கொள் முதல் முறையை அழிக்காதே, அத்தி யாவசிய பொருள் பட்டியலில் இருந்து பருப்பு, வெங்காயம், உருளைக்கி ழங்கு உணவு தானியங்களை நீக்கி மறைத்து வைப்பதற்கு துணை போகாதே என கண்டன முழக்கங் களை எழுப்பினர்.