tamilnadu

மனநோய் பாதித்த இளம் பெண்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருப்பூர், மார்ச் 2– திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அவசர மனநோய் கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தின் மூலம் மீட்கப்பட்ட இருவர் ஒன்பது மாத தீவிர சிகிச்சையில் பூரண குணமடைந்த பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர மனநோய் கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தின் ஊழியர்கள் மீட்டனர். சுற்று வட்டாரப் பகுதியில் விசாரணை நடத்தியதில், அப்பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித் திரிவதாக தெரிவித்தனர். இதையடுத்து அவசர மனநோய் கவனிப்பு மற்று மீட்பு மையத்தின் ஊழியர்கள் திருப்பூர் தெற்கு போலீஸாரிடம் புகார் அளித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இளம்பெண்ணுக்கு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல சிகிச்சை, மனநல ஆலோ சனை, சுயதொழில் பயிற்சி மற்றும் யோகா போன் றவை அளிக்கப்பட்டன. அவருக்கு ஆதார் அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டது. இதையடுத்து மருத் துவக்கல்லூரி மருத்துவமனை பணியாளர்கள் அப்பெண்ணின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவ ரது சகோதரிக்கும் தகவல் அளித்தனர். முழுமையாக குணமடைந்த நிலையில், மருத்துவர் ஆலோசனைப் படி, அவரது சகோதரியுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதே போல் 18 வயது மதிக்கத்தக்க மற்றொரு இளம்பெண் கடந்த டிசம்பர் 20ஆம் தேதியடனறு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் அவசர மனநோய் கவனிப்பு மற்று மீட்பு மையத்தின் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்கு சேர்த்த னர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது முகவரியும் கண்டறியப்பட்டு, மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட் டார்.