tamilnadu

img

விரிக்ஷா பள்ளியில் உலக புலிகள் தினம்

திருப்பூர், ஜூலை 30 – திருப்பூர் வீரபாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் விரிக்ஷா இண்டர் நேஷனல் பள்ளியில் உலகப் புலிகள் தினம் திங்க ளன்று கடைபிடிக்கப் பட்டது.  இப்பள்ளி வளாகத்தில் புலிகளின் இருப்பிடமான குகையை வடிவமைத்து அதன் அருகே புலியின் முகத்தை ரங்கோலி கோலமிட்டு மாண வர்கள் ஆசிரியர்கள் சிறப்பித்தனர்.  அனைத்து மாணவர்களும் புலிகளின் நிறத்தில் உடையணிந்திருந்தனர். முகத்தில்  புலிகளைப் போல் வர்ணம் பூசி புலிகள் தின விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  பள்ளியின் தலைவர் டி.கோவிந்தராஜன் குழந்தைகளுக்கு புலிகளைப் பேணிக் காப்பதின் அவசியத்தை எடுத்துரைத்தார். பள்ளி தாளாளர்  எஸ்.ராஜலட்சுமி முன்னி லையில் மாணவர்கள் “மரங்களை வளர்ப் போம், வனத்தை உருவாக்குவோம், புலி களை பாதுகாப்போம்” என உறுதியேற் றனர்.