tamilnadu

img

மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக - ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம்

திருப்பூர், ஜூலை 12- தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க இலவச மின் சாரத்தை பறிக்கும் மத்திய மின்சார திருத்த சட்டம் 2020-ஐ திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி காங்கேயத் தில் விவசாயிகளிடம் கையெ ழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. விவசாய விரோத, விவசாயிக ளுக்கு எதிரான சட்டத்தை திரும் பப் பெற  மத்திய அரசை வலி யுறுத்தி அகில இந்திய விவசாயி கள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, இலவச மின்சார உரிமை பாதுகாப்பு  கூட்டியக்கம் சார்பில் ஒரு  கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட் டம் காங்கயம் தாலுகாவில் சனி யன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில், திமுக விவசாய அணி நிர்வாகி  ஏ.மாணிக்கவேலன் தலைமை வகித்தார்.

மேலும், திமுக வடக்கு ஒன்றிய செயலா ளர் என்.எஸ்.சிதம்பரம்,  தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்குமார், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் மு.ஈசன், மாநில தலைவர் எஸ்.முத்துவிஸ்வநா தன்,  மதிமுக ஒன்றிய பொறுப்பா ளர் பா.மணி, புரட்சிகர இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் இரா.கவி, சிபிஎம் தாலுகா செய லாளர் கே.திருவேங்கடசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் என்.கே.குப்பு சாமி, செயலாளர் பி.வேலுச் சாமி, திமுக இளைஞரணி நிர் வாகி சக்தி வடிவேல், டெக்ஸ்மோ திருமூர்த்தி, சிபிஎம் மூத்த உறுப் பினர் எஸ்.குமாரசாமி, எல்லப்பா ளையம்புதூர் வடிவேல், சந்த ராண்டிவலசு எஸ்.குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நடத்தப் பட்ட கூட்டத்தில் காங்கயம் பகுதி ஒருங்கிணைப்பாளராக எஸ்.தங்க வேல் தேர்வு செய்யப்பட்டார். மேலும், வரும் ஜூலை 27ஆம் தேதி  விவசாயிகள், நெசவாளர்கள் இல்லங்களில் கருப்பு கொடி ஏற் றும் போராட்டம் காங்கயம் தாலு காவில் நடத்துவது, காங்கயம் தாலுகாவில் அனைத்து ஊராட் சிகளிலும், நகராட்சிப் பகுதிகளி லும் ஒரு லட்சம் கையெழுத்து பெறு வது உட்பட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.