tamilnadu

மலேசியாவில் சிக்கிக்கொண்டவரை மீட்க கோரிக்கை

திருப்பூர், ஜூன் 17- ஆன்மீகச் சுற்றுலாவாக மலேசியா சென்ற கணவரை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத் தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மலேசியா சென்ற இவர் ஊரடங்கு காரணமாக தற்போது வரை இந்தியா திரும்பவில்லை.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நேரத்திலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந் ததாகவும், அவரது விசா காலம் ஒரு மாதத் திற்குள் முடிவடைந்த நிலையில் தற்போது ஒன்றரை மாதமாக குடும்பத்துடன் தொலை பேசி வாயிலாக தொடர்பு கொள்ளவில்லை எனவும், இறுதியாக மே 3 ஆம் தேதி பேசும் போது மலேசியா இமிகிரேஷன் அதி காரிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்வ தாகத் தெரிவித்தார்.  

பின்பு தொடர்பு கொள்ளவில்லை என வும், அதனால் தங்களுக்கு சந்தேகம் இருப் பதால் உடனடியாக அவரை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி தங்கவேலின் மனைவி விஜயா அவரது குழந்தைகளுடன் புதனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

;