tamilnadu

டிராக்டர் மோதி விவசாயி பலி

அவிநாசி, நவ. 24- சேவூர் அருகே கூட்டப் பள்ளியில் சனியன்று இரு சக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதியதில் விவ சாயி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். கூட்டப்பள்ளியைச் சேர்ந்த கருப்பகவுண்டர் மகன் மணியரசு(48). இவ ரது மனைவி ராதாமணி(40). இவர்களுக்கு கௌசல்யா(19), கௌரி(16), தர்ஷணி(12) ஆகிய 3 மகள்கள் உள்ள னர். இந்நிலையில், இவர் வடுகபாளையத்தில் இருந்து கூட்டப்பள்ளி நோக்கி இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந் தார். அப்போது காரைக்குட் டைப்புதூர் அருகே வரும் போது, கூட்டப்பள்ளியில் இருந்து வடுகபாளையம் நோக்கி வந்த டிராக்டர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மணியரசு பலத்த காயம டைந்துசம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இது குறித்து சேவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.