மேட்டுப்பாளையம், ஜன.31- மேட்டுப்பாளையத்தில் யானை தாக்கி விவசாயி ஒருவர் பலியான நிலையில், தங்களுக்கு வனத்துறை யினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத் த்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தை அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சனியன்று இரவு தனது தோட்டத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அப் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையொன்று சம்பத்குமாரை தாக்கி கொன்றது. இதற்கிடையே, சம்பத்குமாரை கொன்ற ஒற்றை யானை ஒரு மாத காலத்திற்கு மேலாக கிராமத்தை ஒட்டிய பகுதிகளிலேயே சுற்றி வரு கிறது.
எனவே, இந்த யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டவும், இப் பகுதியில் உள்ள பாலம் மூழ்கி கிடப் பதால் தற்காலிக பாதையாக மக்கள் பயன்படுத்தும் காட்டுப்பாதையில் உள்ள புதர்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வனத்துறைக்கு பலமுறை கோ ரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதன் காரணமாகவே சம் பத்குமார் பலியாக நேர்ந்தது எனக்கூறி லிங்காபுரம், காந்தவயல், ஆளூர், மொக்கைமேடு உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் சிறுமுகை - மேட்டுப்பாளையம் சாலையில் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சம்பவ இடத் திற்கு வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சாந்தாமணி மற்றும் வனத்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கை கள் நிறைவேற்றப்படும் என அதி காரிகள் உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.