tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

மின் தடை

அவிநாசி, பிப். 2- 15.வேலம்பாளையம், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பரா மரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திங்களன்று (பிப்.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வா ரிய செயற்ப்பொறியாளர் தெரிவித்தார். பராமரிப்பு பணிகளின் காரணமாக 15.வேலம்பா ளையம், ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங் கமேடு, மகாவிஷ்னுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பா ளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே அவுட், ஜிவா நகர், அன்னபூர்ண லே அவுட், திருமுருகன் பூண்டி, துரைசாமி நகர், பெரியாயிபாளையம், பள்ளி பாளையம், வி.ஜி.பி.நகர், அணைப்புதூர். டி.டி.பி. மில்,பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பழங் கரை, ஸ்ரீராம்நகர், கே.ஆர்.சி அமிர்தவர்ஷிணி நகர், கே.ஆர்.சி பிருந்தாவன் நகர், பழைய ஊஞ்சபாளை யம், புதுஊஞ்சபாளையம், டீ ஸ்கூல், தேவம்பாளை யம், குப்பண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல் லாத்துப்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் ஆயி கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநி யோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

திருப்பூர், பிப். 2 – திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் கடத்தப்பட்ட குழந்தையை காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு மீட்டனர். பல்லடம்- மங்கலம் சாலை அரசங்காட்டில் குடி யிருந்து வருபவர் மா.சுடலைராஜா (24). இவரது தந்தையிடம் வீட்டு வேலை கேட்டு வந்த முன்பின் அறிமுகம் இல்லாத பெண், சுடலைராஜாவின் மூன்று வயது பெண் குழந்தையை கடந்த ஜன.24ஆம் தேதி யன்று கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்து பல்ல டம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் குழந்தை கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பல்லடம் காவல் கண்காணிப்பா ளர் முருகவேல் தலைமையில், காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், உதவி ஆய்வாளர்கள் விஜயகு மார், அமல் ஆரோக்கியதாஸ், ஏட்டு பாலமுருகன், காவலர்கள் சேதுமாதவன், அருள், கதிர்வேல், சைபர் பிரிவு தலைமை காவலர்கள் பாலுச்சாமி, சந்தானம் ஆகியோரைக் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. திண்டுக்கல், பழனி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டில் காவல் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். குழந்தையின் புகைப்படம் மற்றும் சிசி டிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு துப்பு துலக்கினர். இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தையு டன் ஈரோட்டில் ஒரு பெண் நின்று கொண்டி ருந்தார். அவரை காவலர்கள் பிடித்து விசாரித்த னர். இதில் அந்த பெண் சேலம் குள்ளம்பட்டியைச் சேர்ந்த மல்லிகா (எ) அல்போன்ஸ் மேரி (24) எனத் தெரிந்தது. அவரை காவலர்கள் கைது செய்து குழந் தையைக் கைப்பற்றி பல்லடம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.   குற்றவாளியைக் கண்டுபிடித்து குழந்தையை மீட்ட காவல் படையினருக்கு காவல் கண்காணிப் பாளர் திஷா மிட்டல் பாராட்டுத் தெரிவித்தார்.