tamilnadu

கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சையளிக்க திருப்பூரிலிருந்து 7 மருத்துவ குழுவினர் பயணம்

திருப்பூர், ஜூலை 20 - திருப்பூரிலிருந்து ஏழு மருத்துவக் குழுவினர் காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க புறப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிக ரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது மக்க ளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட் டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் அங்கு கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அம்மாவட்டங் களில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க திருப்பூரில் இருந்து 7 மருத்துவர் குழுவினர் பயணம் மேற்கொண்டனர்.

;