திருப்பூர், ஜூலை 24- திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவ சாயிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் கலந்து கொண்டு விவசாயிகளின் கருத்து களை கேட்டறிந்தார்.
அப்போது, விவசாய நிலத்தின் வழியே உயர்மின் கோபுரம் அமைத்து மின்கேபிள் பதிப்ப தற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், நிலமதிப்பை அழிக்கும் இத்திட்டத்தை நிறுத்த வேண்டும். அல்லது கேபிள் வழியே சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் என்.டி. வெங்கடாசலம் பேசுகையில், பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் வந்து பார்வையிடுவதாகவும், இதுகுறித்து மின் துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். இந்நிகழ் வில் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மு.ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.