tamilnadu

img

மாணவர்கள் குடும்பத்திற்கு , அரசு பள்ளி ஆசிரியர்கள் உதவி

அவிநாசி, மே.2 - சேவூர் அருகே சுள்ளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் குடும்பத்திற்கு, பள்ளி ஆசிரியர்கள் சார்பில் முதற்கட்டமாக உணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. சுள்ளிப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 10 மாணவர்கள் குடும்பத்திற்கு, பள்ளி ஆசிரியர்கள் சார்பில் முதற்கட்டமாக காய்கறிகள், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஷ்வரி, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் லீலாவதி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.