திருப்பூர், அக்.14- திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவல கத்தின் செயல்பாடு மோசமான நிலை யில் உள்ளதாகவும், அதை சீரமைத்து வரக்கூடிய சட்டப் பேரவைத் தேர்தலை எவ்வித குளறுபடியும் இல்லாமல் சிறப்புடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வற்புறுத்தி உள்ளன. வரும் ஜன.1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டி யல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, வாக்குச் சாவடிகளை தணிக்கை செய்து, பகுப் பாய்வு செய்தல் மற்றும் பிரிவுகளை ஏற்படுத்துதல் மற்றும் 1500 வாக்காளர் களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சா வடிகளை பிரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் கால நிர்ணயம் செய்துள்ளது. திருப் பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்கா ளர் பதிவு அலுவலர்கள் ஆகியோ ரால் தணிக்கை செய்யப்பட்டு, வாக்குச் சாவடிகளை பிரிப்பதற்கு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, பிரிக்க உத்தேசிக்கப் பட்டுள்ள வாக்குச்சாவடிகளை உள்ள டக்கிய வரைவு வாக்குச்சாவடிகள் பட்டி யலை செவ்வாயன்று அங்கீகரிக்கப் பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி வெளி யிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சியினருக்கு வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் நகல்கள் வழங்கப் பட்டன. இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்துகளை பதிவு செய்தனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.கோபாலகிருஷ் ணன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் ஆகியோர் பங்கேற்று பேசு கையில், உடுமலை மலைப் பகுதி யில் மலைவாழ் மக்களுக்கு கடைசி நேரத்தில் தொடர்ந்து வாக்குரிமை மறுக்கப்படுகிறது. தளிஞ்சி, கோடாந் தூர், மாவடப்பு உட்பட 18 மலைவாழ் கிராமங்களும் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது. 18 மலைவாழ் கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லையெனக் கூறி, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு ரிமை வழங்கப்படவில்லை. சட்டப் பேரவைத் தேர்தலிலும், அனைவரும் வாக்களிக்க, மலை கிராமங்களில் இருந்து திருமூர்த்தி நகருக்கு வர வேண்டிய தேவை ஏற்படுகிறது. இத னால் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவர் கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற் படுகிறது. எனவே, மலைவாழ் மக்களின் இந்த சிரமத்தை தவிர்க்க மலைகிராமங்களில் வாக்குச்சாவடி மையங்களை அமைத்து, அவர்களின் வாக்குரிமையை உறுதிப் படுத்த வேண்டும். மலைவாழ் மக்களின் பல ஆண்டு கால கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். குறுமலை, மேல்குறுமலை, குழிப்பட்டி, ஈசல்திட்டு ஆகிய மலைவாழ் கிராமங்களில் வாக் களிக்க பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 7கி.மீ தூரம் நடந்து திருமூர்த்தி நகருக்கு வந்து வாக்களிக்க வேண்டும். இந்த 4 மலைவாழ் கிராமங்களில் 2,200 வாக்குகள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட வேண்டும். இதைவிட மோச மான தமிழகத்தின் பல மலை கிராமங் களில் கூட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. எனவே, மலை வாழ் மக்களின் சிரமத்தை தவிர்க்க மலைவாழ் கிராமங்களில் வாக்குச்சா வடிகள் அமைக்கப்பட வேண்டும் என்றனர். மேலும், திருப்பூர் மங்கலம் சாலை 56ஆவது வார்டு பாரப்பாளையம் நடு நிலைப் பள்ளி இடிக்கப்பட்டு, கட்டிடப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அங்குள்ள வாக்குச்சாவடி, 46-ஆவது வார்டு ராயபுரம் ரோட்டரி மெட்ரிக் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. ராய புரம் ரோட்டரி பள்ளியில் வாக்களித்த வர்கள், ராயபுரம் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இது வாக்காளர்களுக்கு குழப்பத்தையும், சிரமத்தையும் அளிக்கும். இடிக்கப்படும் பள்ளிக்கு பதிலாக மங்கலம் சாலை யில் உள்ள ஏதாவது ஒரு பள்ளிக்கு வாக்குச்சாவடியை மாற்றி, வாக்காளர் களின் சிரமத்தை தவிர்க்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரிவு செயல்பாடு மிக மோசமாக உள்ளது. இந்த கூட்டத்துக்கான ஏற் பாடுகள் கூட முறையாக இல்லை. அர சியல் கட்சியினரை ஆட்சியர் அலுவ லகத்துக்கு வரவழைத்துவிட்டு, கூட்டம் நடத்தும் அறையை மாற்றி, மாற்றி தேவையற்ற அலைக்கழிப்பு செய்கின்ற னர். இது எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தற்போது வெளி யிடப்பட்ட வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலு வலகங்களான திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகங் கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார் வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வெளி யிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சா வடிகள் பட்டியல் தொடர்பாக கோரிக் கைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின், வரும் அக்.20ஆம் தேதிக் குள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க லாம் என பொதுமக்களுக்கும், அரசி யல் கட்சியினருக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.