tamilnadu

img

திருப்பூர் : சுத்தகரிப்படாத குடிநீரால் பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பூர், அக். 11 - இடுவம்பாளையம் கொக்குப் பாறை பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் பழுப்புநிறத் தில் இருந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட இடுவம்பாளையம் கொக்குப் பாறை பகுதியில் 100க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில், சமீபத் தில் விநியோகம் செய்யப்பட்ட குடி நீர் முறையாக சுத்திகரிக்காமல் சேரும், சகதியுமாக வந்துள்ளது. குறிப்பாக கொரோனா நோய்த் தொற்று காலமாக இருப்பதுடன், சமீப நாட்களாக மழை பெய்து பொது மக்கள் காய்ச்சல், சளி, இரு மல் என பல்வேறு உடல் உபாதை களைச் சந்தித்து அச்சத்துடன் உள்ள னர்.

இந்நிலையில், சுகாதார மற்ற கலங்கலான முறையில் குடி நீர் விநியோகம் செய்யப்பட்டதால் கொக்குப்பாறை பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த னர். இதனையடுத்து சனியன்று இப்பகுதி பெண்கள் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபாளையம் மண்டல அலுவ லகத்தில் உள்ள அதிகாரிகளிடம் நேரில் சென்று முறையிட்டனர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த் தையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதாக மாந கராட்சி அதிகாரிகள் உறுதியளித்த னர். இதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.