tamilnadu

img

திருமுருகன் பூண்டியில் ஆழ்துளை கிணற்றுநீர் வழங்கக் கோரிக்கை

அவிநாசி, ஜூன் 25 –  திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 4 ஆவது வார்டு பகுதியில் ஆழ்துளை கிணற்றுநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி நிர் வாகத்திடம் பொதுமக்கள் செவ்வாயன்று மனு அளித்தனர். இது குறித்து திருமுருகன்பூண்டி பேரூராட்சி 4வது வார்டு மற்றும் 7வது குறுக்குத் தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, அதிகப்படியோனார் வசித்து வரும் எங்கள் பகுதியில் கடந்த ஒரு மாதத் திற்கும் மேலாக ஆழ்துளைக் கிணற்றுநீர் முற்றிலும் விநியோகிக்கப்படவில்லை.

இது குறித்து டேங்க் ஆப்பரேட்டரிடம் கேட்ட போது, ஆழ்துளைக் கிணறு வற்றி விட்டதாகக் கூறுகிறார். இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே விரை வில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.