tamilnadu

img

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அவிநாசியில் தேர்தல் பணிமனை திறப்பு

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வெற்றிக்கு களப்பணியாற்றும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா வியாழனன்று அவிநாசியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திமுக மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா தேர்தல் பணிமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். திமுகவின் சிவப்பிரகாஷ், பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்துச்சாமி, ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மதிமுக கோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம், காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம், சாய் கண்ணன், கொங்கு நாடு தேசியமக்கள் கட்சியின் லோகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கருப்புசாமி, மனிதநேய மக்கள் கட்சி அபுசாலி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

;