திருப்பூர், செப். 23 – திருப்பூர் மாவட்ட விசைத்த றித் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்த தோழர் அ.ப., என்றழைக்கப்படும் அ.பழ னிசாமியின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இடுவாய் கிராமத்தில் எழுச்சியுடன் கடை பிடிக்கப்பட்டது. இடுவாய் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கிளை அலுவலக கட்டிடத்தில் திங்களன்று நடை பெற்ற தோழர் அ.ப., நினை வஞ்சலி நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் கே.கருப்பசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி பங்கேற்று தோழர் அ.ப. உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி தோழர் அ.ப.வின் துணிச்சல்மிகு பணி களை எடுத்துக்கூறி நினைவுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங் கம் சார்பாக தீக்கதிர் ஓராண்டு சந்தா தொகையினை சங்க மாநி லக்குழு உறுப்பினர் குமரவேல் வழங்கினார். அதேபோல் செம் மலர், மார்க்சிஸ்ட் மாத இதழ் களுக்கான 30 சந்தா தொகையை கே.கருப்புசாமி கட்சியின் ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தியிடம் வழங் கினார். இத்துடன் இடுவாய் கிளை அலுவலகத்துக்கு 15 இருக்கைகள் வாங்குவதற்கு ரூ.6ஆயிரத்தை குமரவேல், பழனிச்சாமி, சுந்தர மூர்த்தி ஆகியோர் கிளைச் செயலா ளர் கருப்பசாமியிடம் வழங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.கணேசன் உள்ளிட்டோர் நினைவுகூர்ந்து உரையாற்றினர். இதில் கட்சியின் சீராணம்பாளை யம் கிளைச் செயலாளர் ஈஸ்வ ரன், மேற்கு பகுதி செயலாளர் குமரவேல், இந்திய ஜனநாயகா வாலிபர் சங்க இடுவாய் கிளை செயலாளர் ஆறுமுகம், சீராணம் பாளையம் கிளை செயலாளர் மயில்சாமி மற்றும் அ.ப.வின் புதல்வர்கள் அ.ப.பாலசுப்பிரம ணியம், அ.ப.ரத்தினசாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்ட னர்.