தாராபுரம், அக். 19- தாராபுரத்தில் சிஐடியு சார்பில் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தாராபுரம் தாலுகா பொது தொழிலாளர் சங் கம் சார்பில் தாராபுரம் வட் டத்திலுள்ள நெல்விதை உற்பத்தி நிறுவனங் கள், பலசரக்கு கடைகள் (டிபார்ட்மெண்டல் ஸ்டோர்), ஹோட்டல், இரும்பு மற்றும் ஜவுளி நிறுவனங்கள், ரைஸ்மில், ஒர்க் ஷாப், பனியன் மற்றும் பஞ்சாலை நிறுவனங் கள், பேக்கரி, ரொட்டி, அச்சகம், பிளக்ஸ், மரவேலை, தனியார் மோட்டார் தொழில், தனியார் மருத்துவமனை, தனியார் பள்ளி கள், பெட்ரோல் பங்க், கேஸ்விநியோகம், சுமைப்பணி தொழிலாளர்கள், கைத்தறி நெசவு, துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள், அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர் கள், தனியார் பாதுகாவலர்கள், கட்டுமானம், காற்றாலை மற்றும் அனைத்துவகை தொழி லாளர்களுக்கும் போனஸ் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கை கள் குறித்தும் தாலுகா பொதுதொழிலாளர் சங்கபொருளாளர் கே.கோவிந்தராஜ் தலை மையில் அண்ணாசிலை முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், தாராபுரம் தாலுகா பொது தொழிலாளர் சங்க செயலா ளர் பி.பொன்னுசாமி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.