tamilnadu

தீக்கதிர் செய்தி எதிரொலி தாராபுரம் கார்னிவல் எஸ்விஆர் தியேட்டரில் கூடுதல் கட்டணம் வாபஸ்

தாராபுரம், டிச 29 - தாராபுரம் கார்னிவல் எஸ்விஆர் தியேட் டரில் மறைமுக கட்டணம் வசூலிப்பதாக தீக்கதிரில் வெளியான செய்தியை அடுத்து வாபஸ் பெறப்பட்டுள்ளது. தாராபுரம் சர்ச்ரோட்டில் கார்னிவல் எஸ்விஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டர் இயங்கி  வருகிறது. இங்கு 3 திரைகளில் காலை, மாலை, இரவு என திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இத்திரையரங்கில் ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்கப்படு கிறது. மேலும் தியேட்டர் வளாகத்தில் உள்ள கவுண்டர்களிலும் டிக்கெட் விற் பனை நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தியேட்டர் வளாகத்தில் உள்ள கவுண்டர்களில் டிக் கெட்     கட்டணத்துடன் இன்ஸ்சூரன்ஸ் என்ற  பெயரில் ரூ.5 வசூலிக்கப்பட்டு, அதற்கான ரசீதும் வழங்கப்பட்டு வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மறைமுகமாக ரூ.5 கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்திருந்தனர்.  இதுபற்றி தீக்கதிரில் செய்தி வெளி யிடப்பட்டது. இந்நிலையில் வெள்ளியன்று கார்னிவல் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் காப்பீட்டுக்கான சலுகை ஒரு டிக்கெட்டிக்கு ரூ.5 என்பது முற்றிலும் விருப்பமானது எனவும், இது கட்டாயமில்லை. விருப்பமில்லாதவர்கள் காப்பீட்டு சலுகையை தேர்வு செய்யாத வர்கள் காப்பீடு கட்டணம் இல்லாமல் டிக்கெட்டுகளை வாங்கிகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தியேட்டர் டிக்கட் பெறுமிடத்தில் ஒட்டப்பட்டுள்ளது. 

;