tamilnadu

img

நத்தம் புறம்போக்கு குட்டை ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள்

 உடுமலை, ஜூன் 21- உடுமலை வட்டம், பெரிய வாளவாடியில் குட்டை ஆக்கிரமிப்பை அகற்ற பல முறை மனு  கொடுத்தும், எவ்வித நடவ டிக்கை எடுக்காததுடன்,  அலட்சியமாக செயல்பட்ட  வருவாய்த்துறை அதிகாரி களை கண்டித்து, பொது மக்கள் ஜமாபந்தியில்  மனுவுடன் காப்பி தூள் பாக் கெட்டை இணைத்து கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  உடுமலை வட்டம், பெரிய வாளவாடி கிராமத்தில் அரசு நத்தம் புறம்போக்கில் குட்டை (எண் 121)  உள்ளது. இந்த குட்டை பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 25ந் தேதி பொதுமக்கள் மனு அளித்தனர். மேலும் பல முறை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக் காததுடன், அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டனர்.  இதையடுத்து வருவாய்த்துறை அதி காரிகளின் செயலைக் கண்டித்தும், ஆக்கிர மிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் உடு மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற ஜமாபந்தியில் பெரிய வாளவாடி கிராம பொதுமக்கள் காப்பி தூள் பாக் கெட்டுடன் மனு அளித்தனர். இதனால் ஜமா பந்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.