திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள்-விஞ்ஞானி / வல்லுநர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று செல்வநாயகி மெட்ரிக் பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சை மாவட்ட செயலாளர் மற்றும் அறிவியலாளர் முனைவர் சுகுமார் பங்கேற்று மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார். மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி, அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை கேட்டறிந்தனர்.