திருப்பூரில் வேலை வருமானம் இல்லா மலும், உணவு கிடைக்காமலும் கடந்த 45 நாட்களாக அல்லல்பட்டு வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்க ளுக்குச் செல்வதற்காக தினமும் ரயில் நிலையங்களை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். ஆங்காங்கே போராட்டங் களையும் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சனியன்று திருப்பூர் ரயில் நிலையம் நோக்கி வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை காவல் துறையினர் ஜெய்வாபாய் பள்ளி சாலையில் தடியடி நடத்தி விரட்டிவிட்டனர். இதில் ஒரு பகுதி தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலை யம் அருகே இருப்புப் பாதையில் ஏறி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.