tamilnadu

img

திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் பாம்பு

 திருப்பூர், ஜன.1- திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் புதனன்று புகுந்த 4 அடி நீள சாரை பாம்பை வன ஊழியர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.  திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது பதிவான ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மைய மான திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி வளாகத்தில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் செவ்வாயன்று ஜெய்வாபாய் பள்ளி வளாகத்தில் நுழைவுவாசல் முன்புறம் உள்ள செடிகளுக்குள் பாம்பு ஒன்று சென்றதை அங்கிருந்த போலீசார் கண்டனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் வன சரக அதிகாரி மகேஷ் மேற்பார்வையில் சரக பணியாளர் சிவமணி மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து செடிகளுக்கு இடையே பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர்.  அந்த பாம்பை வன ஊழியர்கள் மீட்டு பாதுகாப்பாக கொண்டு சென்று வன பகுதியில் விட்டனர்.

;