tamilnadu

ஊரடங்கை மீறி செயல்பட்ட டாஸ்மாக் கடைக்கு சீல்

திருப்பூர், ஜூலை 19- திருப்பூரில் ஊரடங்கின் போது தடையை மீறி செயல் பட்ட டாஸ்மாக் கடைக்கு மாவட்ட  வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜூலை மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித் துள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பா ளையம் அருகே உள்ள அமர்ஜோதிநகரில் ஞாயிறன்று டாஸ்மாக் கடை இயங்குவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட நிர்வா கத்தின் அறிவுறுத்தல் படி வருவாய்த்துறையினர் சம்பவயி டத்திற்கு விரைந்து சென்று உரிய ஆய்வு  மேற்கொண்டு டாஸ்மாக் கடைக்கு சீல்  வைத்தனர்.

;