குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்ட சபையில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவல கம் எதிரில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சத்தியாகிரகப் போராட் டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளர் பி.ஆர்.நடராஜன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், துணைத் தலைவர் கோபால்சாமி, மதிமுக மாநகரச் செயலாளர் சு.சிவபாலன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.