tamilnadu

img

கூடுதல் போனஸ் வழங்க பாத்திரத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை

திருப்பூர், நவ.4- திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதி செம்பு, பித்தளை, எவர்சில்வர் பாத்திர கூலித் தொழிலாளர்களுக்கும், பித்தளை, செம்பு தேய்ப்பு தேய்க்கும் தொழிலாளர்க ளுக்கும் 2020ஆம் ஆண்டு போனஸாக கடந்த ஆண்டு வழங்கிய சதவிகிதத்தை விட  கூடுதல் சதவிகிதம் வழங்க வேண்டும் என்று அனைத்து பாத்திர தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 2020ஆம் ஆண்டு பாத்திரத் தொழிலா ளர்களுக்கு போனஸ் தொடர்பான அனைத்து பாத்திரத் தொழிற் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் திங்களன்று திருப் பூர் கோவை மாவட்ட பாத்திரத் தொழிற் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ காமாட்சியம்மன் உலோக பாத்திரத் தொழிற்சங்க தலைவர் டி.வி.முத்துகிருஷ் ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில், கே.குப்புசாமி, சி.ஆறுமுகம் (சிஐ டியு), ஆர்.தேவராஜ் (ஏடிபி), ந.வேல்சாமி, மு.ரத்தினசாமி (எல்பிஎப்), வி.செல்வராஜ், பி.நாகராஜ் (ஏஐடியுசி), ஏ.டி.சீனிவாசன், எம்.லட்சுமி நாராயணன் (பிஎம்எஸ்), கே.திருஞானம், வி.சுப்பிரமணியம் (எச் எம்எஸ்), வி.ஆர்.ஈஸ்வரன் (ஐஎன்டியுசி) ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பாத்திரத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கியதை விட கூடுதல் சதவிகி தம் போனஸ் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வழங்க வேண்டும். போனஸ் வழங்காத பட்டறைதாரர்களிடம் இருந்து தொழிலாளர்களுக்கு அனைத்து சங்கங்களின் மூலம் போனஸ் பெற்றுத் தருவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.