tamilnadu

திருப்பூர் நியாயவிலைக் கடைகளில் அரிசி விநியோகத்தில் குளறுபடி

திருப்பூர், மே 8- திருப்பூர் நியாயவிலைக் கடை களில் மாநில அரசு அறிவித்த படி கூடுதல் அரிசி வழங்கு வதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் கடை விற்பனை யாளர்களுக்கும், பொதுமக்களுக் கும் இடையே சச்சரவு ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா ஊரடங்கு காரணமாக நியாய விலைக் கடைகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ரேசன் பொருட்களை இலவச மாக வழங்குவதாக அறிவித்துள் ளது. அத்துடன் அரிசி பெறக்கூடிய வர்களுக்கு நபருக்கு மாதம் 10 கிலோ வீதம் கூடுதல் அரிசி வழங் கப்படும் என்றும் அறிவித்தி ருந்தது.  மே மாதத்திற்கான பொருட்கள் ஏப்ரல் இறுதியி லேயே வழங்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும் அந்த அறிவிப்பு அமலாகவில்லை. இதனிடையே மே 2, 3 ஆகிய இரு நாட்கள் ஒவ்வொரு ரேசன் கடை யிலும் பொருட்கள் பெற வேண்டி யவர்களுக்கு நாள், நேரம் குறிப் பிட்டு டோக்கன் வழங்கப்படு வதன் அடிப்படையில் பொது மக்கள் சமூக விலகலைக் கடைப் பிடித்து பொருட்களை நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு அறிவித்தபடி மே 4 ஆம்  தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மே மாதத் திற்கான ரேசன் பொருட்கள் வழங்குவது தொடங்கி விட்டது. எனினும் அரிசி வழங்குவதில் ஏகப் பட்ட குளறுபடி இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். குறிப்பாக இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கு 20 கிலோ,மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு 30  கிலோ, 4 பேர் கொண்ட குடும்பத் துக்கு 40 கிலோ என அறிவிக்கப் பட்டதில் மே மாதத்தில் வழக்க மாக வழங்கும் அளவுடன் கூடுதல் அரிசி பாதியும், ஜூன்மாதத்தில் மீதியும் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருப்பூரில் ரேசன் கடைகளில் பல இடங்களில் அறிவிக்கப்பட்டதற்கு மாறாக ஏற்கெனவே வழங்கப்படும் அளவு அரிசியே வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் அரிசி கிடைக்கவில்லை. சிலருக்கு கூடுதல் அரிசி வழங்கப் பட்டாலும் அதிலும் அளவு குறை வாக உள்ளது. 15 கிலோ அரிசி அளவை செய்து கொடுத்தால் வீட் டில் சென்று அளந்து பார்த்தால் 2, 3 கிலோ அரிசி குறைவாக இருப்ப தாக பெண்கள் குற்றம் சாட்டினர். அத்துடன் சில குடும்பதாரர் களுக்கு கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் அரிசி விநியோகம் செய்யப்பட்டதால் கடைக்காரர் களிடம் பொதுமக்கள் சர்ச்சையில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து நியாயவிலைக் கடைக்காரர்கள் கூறும்போது, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் உரிய அளவு ஏற்கெனவே கணினி யில் பதிவேற்றம் செய்யப்பட்டி ருக்கும். அந்த அளவைத்தான் நாங்கள் மக்களுக்கு கொடுக் கிறோம். கணினியில் பதிவேற்றம் செய்ததிலேயே குளறுபடிகள் இருப்பதால் சிலருக்கு குறைவான அளவு அரிசி வழங்கும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் எங்களுடன் சச்சரவு செய்கின்ற னர். நாங்கள் நிலைமையை விளக்கிக் கூறினாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக உணவு வழங்கல் துறை அதிகாரி களிடம் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சார்பில் புகார் தெரி வித்தோம். ஆனால் அதிகாரிகள், இப்போது கொடுக்கும் அரிசி போக, மீதி கூடுதல் அரிசி மே 17ஆம் தேதிக்கு பிறகு வழங்கப்ப டும் என மக்களிடம் சொல்லுங்கள் என தட்டிக்கழிக்கும் வகையில் பதில் கூறுகின்றனர்.

அரசு உத்தர வாக ஊடகங்கள் மூலம் மக்க ளுக்கு தகவல் போயிருக்கும் நிலை யில், நாங்கள் சொன்னாலும் மக்கள் கேள்வி கேட்கின்றனர். அதோடு அதிகாரிகள் இதைப் பற்றி பொறுப்புடன் பதில் சொல் லாமல் தட்டிக் கழிப்பது நியாய விலைக் கடைப் பணியாளர்களை மக்களிடம் சிக்க வைப்பதாக உள்ளது என்றும் கூறினர். இதுதவிர மத்திய அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கும் உரிய அரிசி வழங்குவதில் குளறுபடி உள்ளது. அவர்களுக்கும் உரிய அளவு ஒதுக்கீடு செய்யாமல் இருப் பதால் அவர்களும் கடைக்காரர் களிடம் சச்சரவில் ஈடுபடுகின்ற னர். பத்திரிகை, ஊடக அறிவிப்பு  செய்தால் மட்டும் போதாது, அரசு சொன்னபடி மக்களுக்கு உரிய அளவு அரிசி, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வ தற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் சரியான அளவு உணவுப் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினர்.