tamilnadu

img

திருப்பூரில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதி: வெளியே வர முடியாமல் மக்கள் தவிப்பு

திருப்பூர், நவ.17- திருப்பூர் மாநகராட்சிக்குட் பட்ட பகுதியில் குடியிருப்பு பகு திக்குள் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வரமுடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 34 ஆவது வார்டு ஜே.ஜே.நகர் குடியிருப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகு தியில் இருந்து காசிபாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளுக்கு வர ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே சபரி ஓடை ஆக்கிர மிப்பு செய்யப்பட்டதால் அடிக்கடி ஓடை நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து போக்குவரத்திற்கு இடை யூறு ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த சில  தினங்களாக திருப்பூரில் பெய்து  வரும் கனமழையின் காரணமாக ஓடை நீரோடு, மழைநீரும் சேர்ந்து  அப்பகுதியில் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே  வரமுடியாத நிலை ஏற்பட்டுள் ளது.  

இதன் காரணமாக பொது மக்கள் இங்கிருந்து காசிபாளை யம், நல்லூர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதில் பெரும் இடையூறு ஏற்ப டுவதாகவும், சில நேரங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்ப தால் பெண்கள் பாதுகாப்பு கருதி  கயிறு கட்டி ஒருவர் பின் ஒருவர்  செல்ல வேண்டிய நிலை உள்ளதா கவும், மழை நீர், ஓடை நீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் ஏற்பட்டு தோல் நோய்கள் ஏற்படுவதாகவும் குடியி ருப்பு வாசிகள் தெரிவித்தனர். சில நேரங்களில் தேங்கியுள்ள நீர்  வீடுகளுக்குள் வருவதால் குடிநீர்  ஆதாரமும் பாதிக்கப்படுவதாக வும் கூறினர். இதுகுறித்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள நீரை உட னடியாக அகற்ற நடவடிக்கை  எடுக்கவில்லை எனில் போராட் டத்தில் ஈடுபடப் போவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.