திருப்பூர், செப். 20- அனைத்து மக்களுக்கும் வழங்குவதற்கு நியாய விலைக் கடைகளுக்கு ரேசன் பொருட்களை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியா ளர்கள் சங்கம் நிர்வாகக்குழு கூட்டம் ஞாயி றன்று சிஐடியு மாவட்டத் தலைமை அலுவ லகத்தில் மாவட்டத் தலைவர் கே.மகேந்தி ரன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானம் வருமாறு:
செப்.22ஆம் தேதி திருப்பூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் களை திரளாக பங்கேற்க செய்வது, ரேசன் பொருட்கள் 100 சதவிகிதம் சரியான அள வில் ஒதுக்கீடு செய்ய கோருவது, பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள் பணி செய்த பணியாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க கோரு தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கருப்புசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவக்குமார், கதிர் வேல் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமு, வேலுச்சாமி, சரவணமூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.