tamilnadu

img

சம்பள பாக்கியை வழங்காமல் இழுத்தடிப்பு- தொழிலாளி தர்ணா

தாராபுரம், டிச. 24 - தாராபுரத்தில் சம்பளபாக்கியை வழங்காத அன்னருத்ரா ரெஸ்டா ரெண்ட் முன்பு தொழிலாளி தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. தாராபுரம் பைபாஸ் சாலையில் அன்னருத்ரா ரெஸ்டாரெண்ட் என்ற தனியார் உணவு விடுதி இயங்கி வரு கிறது.இங்கு திருவாருர் மாவட் டம், திருத்தங்கூரை சேர்ந்த தியாக ராஜன் (47) என்பவர் ஓட்டலில் தங்கி சமையல் தொழிலாளியாக  பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடை பெறுவதால் தியாகராஜனுக்கு விடு முறை அளித்த ஓட்டல் நிர்வாகம் சம்பள பாக்கியை வங்கி கணக்கில் போடுவதாக கூறியுள்ளனர். இதைய டுத்து தியாகராஜன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ஆனால் ஓட்டல் நிர் வாகம் சம்பள பாக்கியை வங்கி கணக் கில் போடவில்லை.  இதுகுறித்து ஓட்டல் உரிமை யாளரிடம் தியாகராஜன் கேட்டபோது  முறையாக பதிலளிக்காமல் அவரை ஓட்டலுக்குள் வரக்கூடாது என விரட் டியுள்ளனர். இதுகுறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலை யில், காவல்துறையினர் எவ்வித நடவ டிக்கையும் எடுக்காமல் அலைக்கழித் துள்ளனர். இதையடுத்து தியாகரா ஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்து முறையிட் டுள்ளனர்.  இதன்பின் சிபிஎம்  தாலுகா செயலாளர் என்.கனகராஜ் ஒட்டல் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத் தியும், சம்பள பாக்கியை தராமல் இழுத் தடித்துள்ளனர்.  இதனால் அதிருப்தியடைந்த தியா கராஜன் செவ்வாயன்று மதியம் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் அன்ன ருத்ரா ரெஸ்டாரெண்ட் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த தாராபுரம் காவல் துணை ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் ஓட்டல் நிர்வாகத்தினரு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 3 நாட்களில் சம்பள பாக்கியை வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து தியாகராஜன் போராட் டத்தை விலக்கி கொண்டார். இத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட் டது.