tamilnadu

img

வெடி வைத்து குழி தோண்ட பொதுமக்கள் எதிர்ப்பு

அவிநாசி, அக். 11- அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கான குழாய் பதிக் கும் பணிகளில், குடியிருப்பு பகுதிகளில் வெடி வைத்து குழி தோண்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம்,  அவிநாசி பேரூராட்சி எல்லைக் குட்பட்ட பகுதியில், தற்போது, அத்திக்கடவு - அவிநாசி திட் டத்திற்கான குழாய் பதிக்கும் பணி கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்று வருகின்றது. இதற்காக, அவிநாசி நகர் முழுவதும் சாலையோரம் குழிதோண்டி, குழாய் பதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவிநாசியில் உள்ள மடத்துப்பாளையம், வினோபா வீதி, எம்.கே.பி லே-அவுட், பிள்ளையார் கோவில் வீதி, எம்.ஆர்.பி வீதி உள்ளிட்ட பகுதிகளில் குழி தோண்டி குழாய் பதிக்கும் பணிகள் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் குழி தோண்டும் போது எதிர்படும் பாறைகளை, வெடி வைத்து தகர்க்கபடு வதாகவும், குடியிருப்பு பகுதியில் அதிர்வுகள் ஏற்பட்டு வீடு கள் மற்றும் பொருட்கள்  சேதம் அடைந்து வருவதாக வும் அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், இப்பணியை கண்காணித்து வரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளி டம் கேட்ட போது, விதிமுறைக்கு உட்பட்ட வெடி பொருள் தான் பயன்படுத்தப்படுகிறது என அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.