உடுமலை, அக். 19- போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்துவகையான நிலுவை தொகை களையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. அரசு போக்குவரத்து கழக ஓய்வூ பெற்றோர் நல அமைப்பின் சிறப்பு பேரவைகூட்டம் சனிக்கிழமை உடுமலை ராமய்யர் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு தங்கவேல் தலைமை தாங்கினார். இதில் வரும் மாதங்களில் ஒன்றாம் தேதியே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். தற்போது 119 சதவிகிதமாக உள்ள பஞ்சப்படியை 154 சதவிகித மாக உயர்த்தி தர வேண்டும்.அனைத்து ஓய்வூதி யர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். பணியின் போது உயிர் இழந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ள வாரிசுகளுக்கு வழங்க வேண்டிய வேலையை தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இப்பேரவை கூட்டத்தில் துரைராஜ், மத்திய சங்க நிர்வாகிகள் நாச்சிமுத்து, கந்தசாமி, மண்டல தலைவர் பழனிசாமி, சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் பழனிசாமி, காளிமுத்து, கருப்பணன் உள்ளிட்ட திர போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட னர்.