tamilnadu

img

குடியிருப்பு பகுதியில் தனியார் லாரி பார்சல் அலுவலகம் அடிக்கடி மின் இணைப்பு துண்டிப்பால் மக்கள் அவதி

திருப்பூர், நவ.1- திருப்பூரில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள தனி யார் லாரி பார்சல் அலுவலகத்துக்கு வந்து செல்லும் கனரக லாரிகளால் வீடுகளுக்கான மின் இணைப்பு வயர்கள் அடிக்கடி துண்டிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் மின் வெட்டால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வரு கின்றனர். திருப்பூர் காலேஜ் ரோடு, திருவிக நகர், எல்ஐசி காலனி முதல் வீதியில் அஜீம் டிரான்ஸ்போர்ட் கம்பெனி என்ற தனி யார் பார்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவ னத்திற்கு கனரக சரக்கு லாரிகள் பார்சல்களை ஏற்றி இறக்க வந்து செல்கின்றன. இந்த நிறுவனம் அமைந்திருக் கும் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந் நிலையில், இங்கு வரக்கூடிய கனரக லாரிகள் வீதியின் குறுக் காக, மேலே செல்லக்கூடிய மின்கம்பி வடங்களை அவ்வப் போது துண்டித்து விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அஜீம் நிறுவனத்தின ரிடம் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தாலும், முறையான பதில் கூறாமல் அலட்சியப்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒரு மாதத்துக்கு 7 முதல் 8 முறை இது போல் மின்கம்பி வடங்கள் துண்டிக்கப் படுவதால், அந்த பகுதியில் இருக்கும் வீடுகள் இருளில் மூழ்கிவிடுவதாகவும், மின்சாரம் இல்லாமல் வீடுகளில் அன்றாடம் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் பாதிப்ப தாகவும் தெரிவித்தனர். ஆனால், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர் ஆளும் கட்சிக்காரர்  எனக் கூறிக் கொண்டு தன் னிச்சையாக செயல்படுவதாகவும், துண்டிக்கப்படும் மின்  இணைப்புகள் பல மணி நேரம் கண்டுகொள்ளாமல் விடப் பட்டு பிறகு இணைப்பு கொடுக்கப்படுகிறது என்றனர்.

மேலும், தனியார் நிறுவனத்தால், குடியிருப்பு மக்க ளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மின் கம்பி வடம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்க சம்பந்தப் பட்ட அரசுத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இதே நிலை தொடருமானால் தனியார் பார்சல் அலு வலகத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என அப்பகுதி யைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகி டி.பொன்னு சாமி தெரிவித்துள்ளார்.