tamilnadu

மாணவருக்கு பாராட்டு

திருப்பூர், ஜூன் 15- திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார்- வாணி தம்பதியின் மகனும், கிட்ஸ் கிளப்  சர்வதேச பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுமான ரித்விக், உலகத்திலுள்ள அனைத்து நாடுகளின் பெயர்களையும் நினைவு கூர்ந்து குறைந்த வினாடியில் கூறி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக கலாம் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார். மேலும் அபா கஸ் மனக்கணித முறையில் நடை பெற்ற மாவட்ட, மாநில, தேசிய அளவி லான போட்டியிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  சிறுவயது முதலே பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்று தன் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்கள் வென்றதே இது போன்ற சாதனையை படைக்க உறுதுணை யாக இருந்ததாக ரித்விக் தெரிவித் துள்ளார். மேலும் சாதனை படைத்த  ரித்விக்கை செல்வராஜ் எம்.எல்.ஏ.,  திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.

;