திருப்பூர், அக். 14 - திருப்பூர் மாநகராட்சி பட்டுக்கோட்டையார் நகர் பகுதி யில் 600 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு உப்புத் தண்ணீர் சரிவர வருவதில்லை. அத்துடன் 3ஆவது வீதியில் உப்புத்தண்ணீர் அடிகுழாய் பழுத டைந்துள்ளது. எனவே பழுதடைந்த குழாயை சரி செய்வது டன் அனைத்து வீதிகளிலும் உப்புத் தண்ணீர் சீராக விநியோ கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை முறைபடுத்தி குறைந்தபட்சம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பட்டுக்கோட்டையார் நகர் கிளைகளின் சார்பில் த. ஆறுக்குட்டி, த.நவீன் லட்சுமணன், மு.சதீஷ்குமார், பா.விக்னேஸ்வரன், மாசிலாமணி, மு.மௌனிஷ் கண்ணன் ஆகியோர் புதனன்று மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.