tamilnadu

img

பெருமாநல்லூர் நெடுஞ்சாலை தடை அகற்றம் - இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருப்பூர், ஜூன் 18 - பெருமாநல்லூரில் கொண்டத்துக் காளியம்மன் கோயில் முன்பாக நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்தை தடுத்து கோவில் நிர்வாகம் அடைத்து வைத்திருந்தது அகற் றப்பட்டது. இதையடுத்து வியாழனன்று பெருமாநல்லூரில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். இதில் திமுக, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூ னிஸ்ட், கொமதேக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, தென்னக மக்கள் சங்கம் ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், கோயில் நிர்வாகம் ஏற்படுத்திய இந்த தடையை அகற்றுவதற்கு உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார்  அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் நூற்றாண்டு  கால நெடுஞ்சாலையை மீட்க உதவிய அனைவருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வ தாக அனைத்து கட்சியினர் கூறினர்.

;