tamilnadu

img

சுகாதார பணி செய்க மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மக்கள் கோரிக்கை மனு

திருப்பூர், டிச. 19 - திருப்பூர் மாநகராட்சி 14 ஆவது (பழைய வார்டு6) வார்டுக் குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடான நிலையில் உள்ள கழி வுநீர் கால்வாயைத் தூய்மைப்ப டுத்தவும், ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை சரி செய் யவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொது மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். திருப்பூர் பெரியார் நகர், முத்து கோபால் நகர் பகுதிகளில் பல இடங் களில் மின்கம்பங்கள் காங்கிரீட் காரைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரி வதுடன் எப்போது வேண்டுமானா லும் விழுந்துவிடும் நிலையில் உள் ளன. மேலும் அந்த கம்பங்களின் வழியாகச் செல்லும் மின் கம்பி கள் மிகவும் தாழ்வாகச் செல்கின் றன. அதேபோல் இப்பகுதியில் கழிவுநீர் சாக்கடைகளில் மண் அடைத்து, கழிவுநீர் செல்ல முடி யாமல் இருப்பதுடன் சில இடங் களில் புதர்கள் மண்டி பாம்பு, பல்லிகள் உள்ளிட்ட விச ஜந்து கள் நடமாடும் ்இடமாக மாறி இருக்கின்றன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலம்பாளை யம் நகரக்குழு உறுப்பினர் பி.பாபு தலைமையில் அப்பகுதி பெண்கள் சுமார் 25 பேர் பொது மக்களிடம் கையெழுத்துப் பெற்ற கோரிக்கை மனுக்களுடன் புதன்கிழமை முத லாவது மண்டல அலுவலகத்திற்குச் சென்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலா ளர் வி.பி.சுப்பிரமணியம், பி.பாபு ஆகியோருடன் பொது மக்கள் முத லாவது மண்டல உதவி ஆணையர் வாசு குமாரை சந்தித்து மனுவை அளித்து, குடியிருப்புப் பகுதியில் உள்ள மோசமான நிலையை எடுத் துக் கூறினர். இது குறித்து உதவிப் பொறியாளரை அப்பகுதிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப் பதாக அவர் தெரிவித்தார். அத்துடன் அனுப்பர்பாளை யம் மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று மின் துறையினரிடம் பழு தான மின் கம்பங்கள் குறித்து மனு அளிக்கப்பட்டது. இதன் அடிப்ப டையில் மின்வாரிய பணியாளர் கள் முத்துக்கோபால் நகர் உள் ளிட்ட பகுதிகளுக்கு வந்து ஆய்வு செய்தனர். மாற்ற வேண்டிய மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் ஆகியவற்றை மாற் றுவதற்கான ஏற்பாடு செய்வதாக அவர்கள் கூறினர். எனினும், முதல் மண்டல அலு வலர்கள் உறுதியளித்தபடி கழிவு நீரை வெளியேற்றவும், அப்பகுதி யைத் தூய்மைப் படுத்தவும் புதன் கிழமை ஆட்களை அனுப்ப வில்லை. இது குறித்து மீண்டும் வெள்ளியன்று அதிகாரிகளைச் சந்தித்து முறையிடப் போவதாக நகரக்குழு உறுப்பினர் பி.பாபு தெரிவித்தார்.