திருப்பூர், நவ. 8 - திருப்பூர் ஒன்றியம் மங்கலம் ஊராட்சி யில் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணக் கோரி ஊராட்சிமன்றத் தலைவர் தலைமை யில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மேற்குப் பகுதியில் அமைந்துள் ளது மங்கலம் ஊராட்சி. அதிகமான குடி யிருப்புகளுடன் விரிவடைந்து வரும் இந்த ஊராட்சியில் போதுமான குடிநீர் விநியோ கம் செய்யப்படாமல் மக்கள் சிரமப்பட்டு வரு கின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வா கம், மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்க வில்லை. இந்நிலையில் சனியன்று ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தி தலைமையில் அப்பகுதி மக்கள் மங்கலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியின ரும் பங்கேற்றனர்.
இத்தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டக்கா ரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். எனினும் மங்கலம் ஊராட்சிக்கு குடி நீர் விநியோகம் செய்யும் புதுத்திருப்பூர் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் நேரில் வந்து பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் போராட் டத்தைக் கைவிட முடியாது என்று உறுதி யாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து புதுத்திருப்பூர் பகுதி மேம்பாட் டுக் கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஊராட்சிக்கு உரிய அளவு குடி நீரை முழுமையாக விநியோகிப்பதாக அதி காரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.