tamilnadu

img

குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்குக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

திருப்பூர், மே 12 - கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு மக்களைக் காக்கும் பணி செய்து வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பரி சோதனை, பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு கோரி சிஐடியு சார்பில் பல் வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்று தாக் குதலுக்கு இடையிலும் மருத்து வர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுடன் தூய்மைப் பணி யாளர்களும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 2 லட்சம் தூய்மைப் பணியாளர்களில் உள்ளாட்சி நிர்வாகங்களில் நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்கள் குறைந்த அளவே உள்ளனர். பெரும் பான்மையானோர் தினக்கூலித் தொழிலாளர்களாக அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ.400 என்ற ஊதி யத்துடன் வேலை செய்து வருகின் றனர். இந்நிலையில், இந்த கொரோனா தாக்கத்தில் சென்னை, சேலம் மற் றும் ஈரோடு மாவட்டங்களில் மூன்று தூய்மைப் பணியாளர்கள் உயிரி ழந்துவிட்டனர்.

எனவே உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிருக்கு ஆபத்தான  நிலையில் வேலை செய்யும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் மருத் துவப் பரிசோதனை செய்வதுடன் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் மற்றும் தினக்கூலிப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ரூ. 600 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தது.  இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஏழு மையங்களில் இப்போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி கருவம்பாளையம், அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம், ஊத்துக்குளி, திருமுருகன்பூண்டி மற்றும் பல்லடம் நகரம் ஆகிய நான்கு இடங்களில் இப்போராட்டம் சமூக விலகலைக் கடைப்பிடித்து நடத்தப்பட்டது.

சிஐடியு மாவட்டத் தலைவர் கே. உண்ணிக்கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், துணைத் தலைவர் ப.கு.சத்தியமூர்த்தி உள்பட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பெருந்திரளானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். சங்க கமிட்டி உறுப்பினர் ரமேஷ் தலை மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் வி. கே.பழனிசாமி, ஊத்துக்குளி பொது தொழிலாளர் சங்க துணைத்தலைவர் ஆர்.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டம் நடை பெற்ற ஏழு மையங்களில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். 

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நெரிஞ் சிப்பேட்டை பேரூராட்சியில் பணி யின் போது உயிரிழந்த தூய்மைபணி யாளி பாலன் (எ) பாலசுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு  மாநகராட்சி அலுவலகம் முன் செவ்வாயன்று காலை தூய்மைப் பணி யாளர்கள் பதாகைகளுடன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு  மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணி யன், செயலாளர் எச்.ஸ்ரீராம், சங்க  செயலாளர் எஸ்.மாணிக்கம், மாவட் டக்குழு உறுப்பினர் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;